For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை 'ஸ்வைன்' புகலிடமாக்கி விட்டது திமுக-ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பன்றி காய்ச்சல் மக்களை பீதியடைய செய்து வருகிறது. திமுகவின் கவனக்குறைவால் தமிழகம் நோய்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

மருத்துவ சேவை மற்றும் நோய் தடுப்பில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழகம் இன்று நோய்களின் புகலிடமாக விளங்குவதில் முன்னணியில் இருக்கிறது. நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைய திமுக அரசு எடுக்காததே இதற்கு காரணம்.

தற்போது பன்றி காய்ச்சல் நோய் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகவும் பீதியடைந்து இருக்கிறார்கள்.

இந்தியாவில், மும்பை மற்றும் புனே நகரங்களில் தீவிரமாக இருந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது தமிழகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.

சென்னையை சேர்ந்த சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் உள்பட மொத்தம் 6 பேர் இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இதுவரை பலியாகி உள்ளனர். சென்னையில் சுமார் 46 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சென்னை பரிசோதனை நிலையம் செயலிழந்துவி்ட்டது...

இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய ஒரே நிலையம் சென்னை, கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து நிலையம் தான்.

ஆனால், தற்போது இந்த நிலையத்தில் இந்த நோயை பரிசோதிப்பதற்கான பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை காரணமாக, இந்த நிலையமே செயலிழந்து உள்ளது என்ற அளவில் செய்திகள் வெளி வருகின்றன. தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலரும் இதை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த 46 பேருக்கு பன்றி காய்ச்சல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், பரிசோதனை கருவிகள் இல்லை என்று கூறுவது அரசின் நிர்வாக திறமை இன்மையையே காட்டுகிறது.

மெத்தனமும், அலட்சியமும் தான் காரணம்...

இரண்டு மாதங்களுக்கு முன்பே பன்றி காய்ச்சல் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யக்கூடிய கருவியைக் கூட இருப்பில் வைத்திருக்காதது அரசின் மெத்தனப் போக்கையும், அலட்சியப் போக்கையும், முன்எச்சரிக்கை இன்மையையுமே காட்டுகிறது.

போர்க்கால நடவடிக்கை...

எனவே, பன்றி காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க தேவையான உபகரணங்களையும், மருந்துகளையும் அதிக அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடைய ஏற்படுத்த வேண்டும்.

தேவையான உடனடி நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X