காவிரி மின் திட்டங்கள்-4 மாநில கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

Cauvery River
சென்னை: ஓகேனக்கல் மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட காவிரிப் படுகைத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்க 17ம் தேதி தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநில கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நான்கு நீர் மின் உற்பத்தி திட்டங்களை தேசிய நீர் மின் கழகம் அமலாக்கத் திட்டமிட்டுள்ளது.

ஓகேனக்கலில் 120 மெகாவாட், கர்நாடகத்தில் சிவசமுத்திரம், 270 மெகாவாட், மேகதாது 400 மெகாவாட் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த திட்டங்களின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை இரு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று தேசிய நீர் மின் கழகம் கூறிவந்தது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மத்திய மின்துறை இணையமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்த போது கர்நாடக முதல்வர் எதியூரப்பா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இதில் இருந்து சிவசமுத்திரம் திட்டத்தை நீக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. அதை தாங்கள் தனியாக அமைக்க போவதாகவும், அதில் கிடைக்கும் மின்சாரம் தங்களுக்கே முழுமையாக வேண்டும் என்றும், மற்ற திட்டங்களை இணைந்து செய்து அதை பிரித்து கொள்ளலாம் என்றும் கூறி வருகிறது. ஆனால், தமிழக அரசு இதற்கு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது இது குறித்து விவாதிக்க மத்திய அரசு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வரும் 17ம் தேதி மத்திய மின்துறை செயலர் ஹரிசங்கர் பிரம்மா தலைமையில் நடக்கவிருக்கிறது.

இதில் 4 மாநில தலைமைச் செயலர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+