2 தீவிரவாத அமைப்புகள் மோதல்-பாக்.கில் 70 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான் மற்றும் பிடானி தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 70 பேருக்கு மேல் பலியானார்கள்.
பாகிஸ்தானின் வடமேற்கே, ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கும் வசிர்ஸ்தான் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் முகாம் அமைத்துள்ளனர்.
சமீபத்தில் இந்த முகாமில் அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தாலிபானின் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மெக்சுத் மரணமடைந்தார். ஆனால், தாலிபான்கள் தொடர்ந்து இதை மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தெற்கு வசிர்ஸ்தான் பகுதியில் உள்ள ஜான்டோலா பகுதியில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவான துர்கிஸ்தான் பிடானி என்ற தீவிரவாத பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 70 பேர் வரை பலியானதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பிடானி அமைப்பினர் சுமார் 90 பேர் வரை பலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், இதை துல்லியமாக சொல்ல முடியவில்லை. குறைந்தது 70 பேர் பலியாகி இருப்பார்கள் என கருதுகிறோம்.
இந்த மோதலில் சுமார் 40 வீடுகள் தரைமட்டமாகியது. தாலிபான்கள் தான் முதலில் தாக்கியுள்ளனர். மோதலின் போது தீவிரவாதிகள் கையெறி குண்டுகள், ராக்கெட் ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications