வொக்கார்ட் மருத்துவமனைகளை வாங்கியது ஃபோர்டிஸ்!

இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
மும்பையில் உள்ள இரு மருத்துவமனைகள், கொல்கத்தாவில் உள்ள மூன்று மருத்துவமனைகள் மற்றும் பெங்களூருவில் உள்ள 5 மருத்துவமனைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும். இவற்றின் மொத்த படுக்கைகள் எண்ணிக்கை 1902 ஆகும். இந்த எட்டு மருத்துவமனைகளுடன், தற்போது கட்டப்பட்டு வரும் இரு மருத்துவமனைகளையும் சேர்த்து வாங்கியுள்ளது ஃபோர்டிஸ்.
இந்த ஒப்பந்தத்துக்கான பணத்தில் ரூ.350 கோடியை பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டுகிறது ஃபோர்டிஸ்.
வொக்கார்ட் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளாக இந்த மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. இவற்றை வாங்க கடந்த ஆண்டிலிருந்தே அப்பல்லோ மற்றும் மணிப்பால் மருத்துவமனை நிர்வாகங்கள் முயன்று வந்தன. ஆனால் இறுதியில் இந்த டீல் ஃபோர்டிஸுக்கே சாதகமாக முடிந்தது.
இந்தியாவில் தனியார் நிறுவனங்களுக்கிடையே நடந்துள்ள மிகப் பெரிய மருத்துவமனை விற்பனை ஒப்பந்தம் இதுவே.
இந்தத் தொகையில் ரூ.500 கோடியை வொக்கார்ட் நிறுவன கடன்களுக்காக ஒதுக்கப்படும் என்று வொக்கார்ட் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த இணைப்பு மூலம் நாட்டின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனை நெட்வொர்க்காக வொக்கார்ட்- ஃபோர்டிஸ் பரிமாணம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications