நடுவானில் விமானத்தில் கோளாறு- 62 பயணிகள் தப்பினர்
சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானத்தில் நடு வானில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். இருப்பினும் விமானி மீண்டும் சென்னைக்கே விமானத்தை திருப்பி தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
சென்னையிலிருந்து இன்று காலை 5.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அந்தமானுக்குக் கிளம்பியது. அதில், 62 பேர் இருந்தனர்.
விமானம் சென்னையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் அதில் கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து பறக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.
இதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது. மேலும், தீயணைப்புப் படையினர், பாதுகாப்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். காலை 7.10 மணிக்கு விமானம் மீண்டும் தரையிறங்கியது.
விமானி மீண்டும் விமானத்தை தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏற்பட்டிருந்த பழுத சரி செய்யப்பட்ட பின்னர் காலை 11.30 மணிக்கு விமானம் மீண்டும் அந்தமான் கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications