தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கர் அப்பீல் செய்ய அனுமதி
சென்னை: தோட்டாக்கள் பொருத்திய துப்பாக்கியுடன் விமானம் ஏற வந்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்கருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வசதியாக தண்டனை செப்டம்பர் 23ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் லேரி செல்மேயர் (58). இவர் கடந்த ஜூன் மாதம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரது உடமைகளை சோதித்தபோது அதில் தோட்டாக்கள் பொருத்தப்பட்ட துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து லேரி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆலந்தூர் நீதித்துறை நடுவர் மன்றம், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று அபராதத் தொகையை செலுத்தினார் லேரி. மேலும், தான் அப்பீல் செய்யவுள்ளதாகவும், அதற்கு வசதியாக தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி ராமநாதன், தீர்ப்பை செப்டம்பர் 23ம் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டை லேரி அணுகவுள்ளதாகவும், அங்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் லேரியின் வழக்கறிஞர் கணேஷ் தெரிவித்தார்.
ஏற்கனவே லேரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எழும்பூரில் தங்கியுள்ளார் லேரி.
கடந்த மே மாதம் அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வந்தார் லேரி. மூட்டு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வந்திருந்தார். மீண்டும் அமெரிக்கா செல்ல ஜூன் 11ம் தேதி சென்னை விமான நிலையம் வந்தார். அப்போதுதான் துப்பாக்கியுடன் பிடிபட்டுக் கைதானார். அவரிடமிருந்து 35 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல்












Click it and Unblock the Notifications