பீகாரில் அட்டகாசம் - ஓடும் ரயிலில் பயணி சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

Bihar
பாட்னா: பீகாரில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்ட நபர் அபாயச் சங்கிலியிபை பிடித்து இழுத்து தப்பி ஓடி விட்டார்.

பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.

ஜாஜா - பாட்னா பாசஞ்சர் ரயில் நேற்று போய்க் கொண்டிருந்தது. அப்போது இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால், அந்த நபரை சுட்டார். இதில் அவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார்.

பின்னர் துப்பாக்கியால் சுட்ட நபர் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து பீதியில் உறைந்திருந்த பயணிகள் வேகம் வேகமாக ரயிலை விட்டு இறங்கியதால் அதில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுட்ட நபர் மகேஷ் லேதா ஹால்ட் நிலையத்தில் ஏறியதாக கூறப்படுகிறது.

அவர் கொள்ளையராக இருக்கக் கூடும் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+