காலையில் ஏறி மதியம் இறங்கிய சென்செக்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம் மதியம் சரிவைச் சந்தித்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 152.30 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ். 15,923.09 ஆக இருந்தது. ஐடி நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் முன்னேற்றம் கண்டன.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், 43.60 புள்ளிகள் உயர்ந்து 4705.70 ஆக இருந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்பிரா, ஆர்காம், டிஎல்எப், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் ஆகியவை உயர்வு கண்டன.
ஆனால் மதியம் தலைகீழாக மாறியது நிலைமை. 135 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ் 15,531.09 ஆக குறைந்தது.
அதேபோல நிப்டியும் 44.50 புள்ளிகள் குறைந்து 4617.60 ஆக இருந்தது.
கடந்த ஜூலை மாதம் ஏற்றுமதி 28.4 சதவீதம் சரிவைச் சந்தித்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து சென்செக்ஸில் வீழ்ச்சி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications