ஸ்டிரைக்கால் ரூ. 1000 கோடி நஷ்டம் - எம்.ஆர்.எப்.
சென்னை: எம்.ஆர்.எப். நிறுவனத்தின் அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலை ஊழியர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக் 118வது நாளை எட்டியுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் நிறுவனத்திற்கு இதுவரை ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை எம்.ஆர்.எப். நிறுவன நிர்வாக இயக்குநர் கே.எம். மேமன் கூறியுள்ளார்.
ஸ்டிரைக் குறித்து மேமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலைகளில் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்த ஸ்டிரைக் நீடிப்பதால் இதுவரை ரூ. 1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரச்சினையை தீர்ப்பது குறித்து தமிழக அரசுடன் பேசி வருகிறோம். அரக்கோணத்தில் விரைவில் ஸ்டிரைக் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
எம்ஆர்எப் ஐக்கிய தொழிலாளர் யூனியனுக்கு நிர்வாகம் அங்கீகாரம் தரக் கோரி அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மே 9ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
யூனியனுக்கு அங்கீகாரம் தருவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.