150 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை இல்லாமல் போய்விடும் - ஆய்வு

இது குறித்து இந்திய வெப்ப மண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி எஸ்.எண் பாவிஸ்கர், எர்த் சிஸ்டம் சயின்ஸ் என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ள கட்டுரை..
இந்தியாவின் முக்கிய வாழ்வியல் ஆதாரமான தென் மேற்கு பருவமழை இன்னும் 150 ஆண்டுகளில் காணாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்போது அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான வெப்பமே காரணம்.
பொதுவாக தென் மேற்கு பருவமழை காலத்தில் இந்தியாவின் மேற்கு பகுதி, அரபிக் கடல் பகுதியை விட சுமார் 2 டிகிரி வரை அதிக வெப்பமாக இருக்கும். இதனால் கடல் பகுதியில் இருந்து காற்று இந்தியா நோக்கி வந்து மழையாக பொழிந்து மக்களை குளிர்விக்கும்.
மேலும், ஒரு பகுதியின் வெப்ப நிலை மாற்றம் குறித்து 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் வெப்ப மாறுபாடுகளின் மூலம் அப்பகுதியின் எதிர்காலத்தை எளிதாக கணக்கிட முடியும்.
கடந்த 1948-77 வரையிலான காலத்தில் அரபிக் கடல் பகுதியில் வெப்பம் 18.77 டிகிரி செல்சியசாக இருந்தது. ஆனால், அது 1979-2008 காலத்தில் 0.87 சதவீதம் அதிகரித்து 19.64 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் தற்போது இந்தியாவின் மேற்கு பகுதிக்கும், அரபிக் கடல் பகுதிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் 1.11 செல்சியசாக குறைந்துள்ளது. இதனால் தான் அடிக்கடி பருவமழை பொய்த்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் இன்னும் 150 ஆண்டுகளில் இந்தியாவின் மேற்கு பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதி இரண்டும் ஒரே வெப்பநிலைக்கு வந்துவிடும்.
அப்போது அரபிக் கடலில் இருந்து பருவமழை காற்று இந்தியாவுக்குள் நுழைவது கடினமாகி விடும். இதனால் தென் மேற்கு பருவமழை என்பதே இல்லாமல் போய்விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications