தலாய் லாமாவின் அருணாச்சல் பயணம்- சீனா எதிர்ப்பு

அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி பேசி வருகிறது சீனா. இதுதொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விரிசல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், அருணாச்சல் பிரதேசத்திற்கு வருகிற நவம்பர் மாதம் செல்லவுள்ளார் தலாய் லாமா. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தலாய் லாமாவின் பயணத்தைத் தடுக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அருணாச்சல் பிரதேசத்தில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசத் திட்டமிட்டுள்ளார் தலாய் லாமா.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அதிகாரி ஜியாங் ஜூ கூறுகையில், அருணாச்சல் பிரதேசத்திற்கு தலாய் லாமா செல்வது, சீனா எதிர்ப்புப் போக்கை மேலும் அதிகப்படுத்தும். பிரிவினைவாத பயணம் இது.
அருணாச்சல் பிரதேசம் என்று ஒன்று இல்லை. எனவே லாமாவின் இந்தப் பயணத்தை உறுதியாக எதிர்க்கிறோம் என்றார்.
சீனாவின் இந்த விதண்டாவாதத்திற்குப் பதிலளித்துள்ள இந்தியா, அருணாச்சல் பிரதேச விவகாரத்தில், சீனாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. சீனாவின் எதிர்ப்பு தேவையற்றது. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் போய் வரும் உரிமை தலாய் லாமாவுக்கு உண்டு என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications