For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

70 பவுன் நகை-ரூ. 4.5 லட்சம் பணம் கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் வங்கி ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் வங்கியில் பணிபுரியும் ராமசாமி (36) என்ற அந்த ஊழியரின் வீடு திருப்பூர், அமர்ஜோதி கார்டன், ஏஎஸ் நகரில் இருக்கிறது.

நேற்று அவரும், அவரது மனைவி தாமரை செல்வியும் என்பவரும் இரவு வீட்டைப் பூட்டிவிட்டு அதே பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

வீட்டுக்கு இரவு சுமார் 10.00 மணி அளவில் திரும்பிய அவர்கள் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 4.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் திருப்பூர் புறநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகி்ன்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X