மீண்டும் ஒரு செப்டம்பர் 11 தாக்குதல்?-ஆப்கான் வாலிபரிடம் யுஎஸ் விசாரணை

அந்த இளைஞரின் பெயர் நபிபுல்லா ஜசி. கடந்த 1999ம் ஆண்டு நியூயார்க் வந்த அவர் டென்வர் விமான நிலையத்தில் வாகன ஒட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
அவர் இதுவரை பாகிஸ்தானுக்கு நான்கு முறை போயுள்ளார் என்பதும், அவரது மனைவி தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த எப்பிஐ அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
மேலும், அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தாக்குதல் நினைவு நாளுக்கு முன்னதாக நியூயார்க்கில் இருந்து கொலரடோ மாநிலத்தின் அரோரா நகருக்கு சென்றுள்ள சில சந்தேகத்துக்கிடமான நபர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பாகவும் எப்பிஐ அவரிடம் துருவி துருவி விசாரித்து வருகிறது.
எப்பிஐக்கு சமீபத்தில் நியூயார்க் நகரில் அல்-கொய்தாவுடன் நெருங்கிய நபர் ஒருவர் தங்கியிருப்பதாகவும், அவரும் அவரது கூட்டாளிகளும் செப்டம்பர் 11 போன்ற ஒரு தாக்குதலை மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்றும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தான் அவர்கள் நபிபுல்லாவை பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் சட்ட அமலாக்க பிரிவினர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபிபுல்லாவிடம் சதி தி்ட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து எப்பிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நபிபுல்லாவுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் என நம்புகிறோம். அவர்கள் கடந்த 2005ல் லண்டனில் 56 பேரை பலி வாங்கிய ஹைட்ரஜன் பெராக்ஸைடு வகை குண்டுகளை தயாரித்து தாக்குதல் நடத்தி திட்டமிட்டிருப்பதாகக் கருதுகிறோம்.
இதையடுத்து அதிக அளவு ரசாயனங்களை வாங்குபவர்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். சமீபத்தில் அதிக அளவில் வாங்கியவர்களின் பட்டியலும் பெறப்பட்டுள்ளது.
போலீசார் கொலரடோவில் இருக்கும் அவரது வீட்டிலும், அவரது மாமாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கம்யூட்டர், மொபைல் ஆகியவற்றை கைப்பற்றினர். அவற்றை ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.
இந்நிலையில் நபிபுல்லா தான் குற்றமற்றவன் என்று தெரிவித்துள்ளார். அவரது வக்கீல் கூறுகையில், அவர் அடுத்த மாதம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறார். அவர் அல்-கொய்தாவுக்கு நெருக்கமானவர்களை இதுவரை சந்தித்ததே கிடையாது.
அவர் கொலரடோவில் ஒரு காபி ஷாப்பை வாங்கவிருக்கிறார். அதற்காக தான் அங்கு சென்றார். இதை அவரிடம் அந்த கடையை விற்பனை செய்ய இருப்பவரும் உறுதி செய்துள்ளார் என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications