மீண்டும் ஒரு செப்டம்பர் 11 தாக்குதல்?-ஆப்கான் வாலிபரிடம் யுஎஸ் விசாரணை

அந்த இளைஞரின் பெயர் நபிபுல்லா ஜசி. கடந்த 1999ம் ஆண்டு நியூயார்க் வந்த அவர் டென்வர் விமான நிலையத்தில் வாகன ஒட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
அவர் இதுவரை பாகிஸ்தானுக்கு நான்கு முறை போயுள்ளார் என்பதும், அவரது மனைவி தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த எப்பிஐ அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
மேலும், அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தாக்குதல் நினைவு நாளுக்கு முன்னதாக நியூயார்க்கில் இருந்து கொலரடோ மாநிலத்தின் அரோரா நகருக்கு சென்றுள்ள சில சந்தேகத்துக்கிடமான நபர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பாகவும் எப்பிஐ அவரிடம் துருவி துருவி விசாரித்து வருகிறது.
எப்பிஐக்கு சமீபத்தில் நியூயார்க் நகரில் அல்-கொய்தாவுடன் நெருங்கிய நபர் ஒருவர் தங்கியிருப்பதாகவும், அவரும் அவரது கூட்டாளிகளும் செப்டம்பர் 11 போன்ற ஒரு தாக்குதலை மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்றும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தான் அவர்கள் நபிபுல்லாவை பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் சட்ட அமலாக்க பிரிவினர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபிபுல்லாவிடம் சதி தி்ட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து எப்பிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
நபிபுல்லாவுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் என நம்புகிறோம். அவர்கள் கடந்த 2005ல் லண்டனில் 56 பேரை பலி வாங்கிய ஹைட்ரஜன் பெராக்ஸைடு வகை குண்டுகளை தயாரித்து தாக்குதல் நடத்தி திட்டமிட்டிருப்பதாகக் கருதுகிறோம்.
இதையடுத்து அதிக அளவு ரசாயனங்களை வாங்குபவர்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். சமீபத்தில் அதிக அளவில் வாங்கியவர்களின் பட்டியலும் பெறப்பட்டுள்ளது.
போலீசார் கொலரடோவில் இருக்கும் அவரது வீட்டிலும், அவரது மாமாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கம்யூட்டர், மொபைல் ஆகியவற்றை கைப்பற்றினர். அவற்றை ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.
இந்நிலையில் நபிபுல்லா தான் குற்றமற்றவன் என்று தெரிவித்துள்ளார். அவரது வக்கீல் கூறுகையில், அவர் அடுத்த மாதம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறார். அவர் அல்-கொய்தாவுக்கு நெருக்கமானவர்களை இதுவரை சந்தித்ததே கிடையாது.
அவர் கொலரடோவில் ஒரு காபி ஷாப்பை வாங்கவிருக்கிறார். அதற்காக தான் அங்கு சென்றார். இதை அவரிடம் அந்த கடையை விற்பனை செய்ய இருப்பவரும் உறுதி செய்துள்ளார் என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications