அந்தமானில் ஆயுதங்களுடன் சிக்கிய மர்ம படகு
போர்ட் பிளேர்: அந்தமான் தெரிசா தீவில் 2 ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்கள் 12 உடன் நின்ற மர்ம படகை போலீஸார் கைப்பற்றினர்.
இந்த சம்பவரம் கடந்த 11ம் தேதி நடந்துள்ளது. எனினும் ஏற்கனவே சீன விமானங்கள் பறந்தது, பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி தாக்குதல் என எல்லை பிரச்சனைகளால் மத்திய அரசு திண்டாடி வந்த நிலையில் இதை யாருக்கும் தெரியாமல் அப்படியே அமுக்கிவிட்டது.
தற்போது தான் இந்த விவகாரம் மெல்ல வெளிய கசிய துவங்கியுள்ளது. பாதுகாப்பு காரணத்துக்காக இதை வெளியில் தெரிவிக்கவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந்தமானி சிஐடி போலீஸ் எஸ்பி அசோக் சந்த் கூறுகையில்,
கடலில் மர்ம படகு ஒன்று இருப்பதாக தெரிசா தீவு மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். தற்போது அந்த படகு தெரிசா தீவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
படகில் கிடைத்த குண்டுகளை அப்படியே பயன்படுத்திவிட முடியாது. அவற்றை ஏவுவதற்கு ராக்கெட் லாஞ்சர்கள் தேவை. ஆனால், அப்படி எதுவும் படகில் கிடைக்கவில்லை.
மேலும், இந்த படகில் ஏராளமான கடல்பாசிகள், கடல்பஞ்சுகள் ஒட்டியிருப்பதை பார்க்கும் போது இது பல மாதங்களாக இது இப்பகுதியில் சுற்றி வந்திருக்கலாம் என தெரிகிறது என்றார்.
இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த விவகாரம் குறித்து அந்தமான் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அறிக்கை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப இருக்கின்றனர். அந்த மர்ம படகு இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அல்ல என்றார்.
கவனிக்காமல் விட்டது எப்படி?...
இதையடுத்து போலீஸார் அந்த படகு எங்கிருந்து வந்தது. அது ஏன் பல மாதங்களாக அந்தமான் பகுதிக்குள் சுற்றியுள்ளது என விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 5ம் தேதி பிடிபட்ட வட கொரிய கப்பலுக்கும் இதற்கும் எதாவது தொடர்பு உள்ளதா எனவும் துப்பு துலக்கி வருகின்றனர்.
இதையடுத்து கடல் எல்லைக்குள் ஒரு படகு பல மாதங்களாக சுற்றிய போது அதை கடற்படையும், பாதுகாப்பு படையினரும் அதை அறியாமல் இருந்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தீவிரவாதிகளா... கடத்தல்காரர்களா...
மேலும், படகு கண்டுபிடிக்கப்பட்ட தெரிசா தீவு மலாய்க்கா ஜலசந்திக்கு மிகவும் அருகில் உள்ளது. இந்த ஜலசந்தி ஆயுத கடத்தல், கடற் கொள்ளை, துப்பாக்கி் கொள்ளை உள்ளிட்ட மோசமான சம்பவங்களுக்கு பெயர்பெற்றதாகும்.
இதனால் கடத்தல்காரர்கள் யாரும் பயங்கர ஆயுதங்களை கடத்தியிருக்கலாம் அல்லது தீவிரவாதிகள் யாரும் ஊடுருவதற்கு படகை பயன்படுத்தியிருக்கலாம் போன்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளது. மேலும், அந்த படகில் நிறைய உணவுப்பொருட்கள் இருந்தற்கான அடையாளம் உள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications