நாகர்கோயில்-திமுக வேட்பாளர் மனு தள்ளுபடி
நாகர்கோவில்: நாகர்கோயிலில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கும், ஐந்து பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், 11 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 31 பேரும், நான்கு பேரூராட்சி வார்டுகளுக்கு 14 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் கப்பியறை பேரூராட்சி 14-வது வார்டுக்கு தி.மு.க. சார்பில் வின்சென்ட் ராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கட்சி தலைமையிடம் இருந்து உரிய கடிதம் கொடுக்காததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பள்ளந்துறை 9 வது வார்டில் நடேசன், முட்டம் 2 வது வார்டில் சில்வஸ்ட், திருப்பதிசாரம் 4 வது வார்டில் இம்மானு வேலுதாஸ், தூத்தூர் 1 வது வார்டில் மென்ட்டஸ்மேரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனால் திமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.