3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குக் கிடைத்துள்ளது.
விருது பெற்ற விஞ்ஞானிகள் - சார்லஸ் கே. காவோ, வில்லர்ட் எஸ். பாயில், ஜார்ஜ் இ. ஸ்மித்.
சிசிடி சென்சாரைக் கண்டுபிடித்ததற்காக பாயில் மற்றும் ஸ்மித்துக்கும், ஆப்டிகல் கம்யூனிகேஷனுக்கான பைபர்களில் ஒளியின் ஊடுறுவல் குறித்த சாதனைக்காக காவோவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்படுவதாக நோபல் விருதுக் கமிட்டி தெரிவித்துள்ளது.
நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசும் 3 பேருக்குக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள 3 விஞ்ஞானிகளுமே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications