மாவோயிஸ்டுளை பழிவாங்குவேன்-மகன் சபதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எனது தந்தையைக் கொன்று விட்டீர்கள். ஆனால் உங்களை நான் சும்மா விட மாட்டேன். போலீஸில் சேர்ந்து உங்களைப் பழிவாங்குவேன், உங்களைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் 7 வயது மகன் ஆவேசமாக கூறியுள்ளான்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவார் என்பவரை கடத்திச் சென்ற மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் அவரது தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனால் ஜார்க்கண்ட் மாநிலம் மட்டும் அல்லாமல் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

இந்த நிலையில் இந்துவாரின் 7 வயது மகன் அபிஷேக் இந்துவார், மாவோயிஸ்டுகளை பழி தீர்ப்பேன் என்று சபதம் எடுத்துள்ளான்.

இதுகுறித்து ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில், கூடியிருந்த செய்தியாளர்கள் முன்பு அவன் கூறுகையில், எனது தந்தையை கொன்று விட்டீர்கள். நான் போலீஸில் சேருவேன், உங்களை எல்லாம் கொல்லாமல் விட மாட்டேன், பழிவாங்காமல் விட மாட்டேன் என்று ஆவேசமாக கூறினான் அபிஷேக்.

ஜார்க்கண்ட் காவல்துறை சிறப்புப் பிரிவில் உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்து வந்தவர் பிரான்சிஸ் இந்துவார். இவரைக் கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், 3 மாவோ தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

செப்டம்பர் 30ம் தேதி கடத்தப்பட்டார் பிரான்சிஸ். அவரது நேற்று காலை ராஞ்சி - ஜாம்ஷெட்பூர் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+