For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியராக மாற்றுக-நகராட்சி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

Google Oneindia Tamil News

மதுரை: நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களையும் தமிழக அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என கோரி நகராட்சி அலுவலக உதவியாளர்கள் மாநில சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறிக்கு மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் மொத்தம் 102 நகராட்சிகள் உள்ளது. அவற்றில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள நகராட்சியில் அலுவலக உதவியாளர்கள், வாட்ச்மேன், டிரைவர், கிளினர், துப்புரவு பணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர், மேஸ்திரி என பலர் கடந்த பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வருகின்றோம்.

நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றோம். அமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளோம்.

தமிழக முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இருப்பினும் எங்களது கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X