For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜீவுக்கு எதிரான காலிஸ்தான் சதி - தவிடுபொடியாக்கிய பிரிட்டிஷ் உளவுப் பிரிவு

Google Oneindia Tamil News

Rajiv Gandhi
லண்டன்: 1985ம் ஆண்டு ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய காஷ்மீர் தீவிரவாதிகளும், காலிஸ்தான் தீவிரவாதிகளும் போட்டிருந்த சதித் திட்டத்தை முறியடித்து அவரைக் காப்பாற்றியுள்ளது இங்கிலாந்தின் உளவுப் பிரிவான எம்ஐ 15 என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு அப்போது சென்றிருந்தபோது ராஜீவ் காந்தியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாம். ஆனால் அதைக் கண்டுபிடித்த எம்ஐ 15 அந்தத் திட்டத்தை முறியடித்து விட்டது.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் வரலாற்றியலாளர் கிறிஸ்டோபர் ஆண்ட்ரூ எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில்,

மிகச் சிறந்த உளவு அமைப்பும், சில சீக்கிய, காஷ்மீர் தீவிரவாதிகளின் கைதும், ராஜீவ் காந்திக்கு எதிரான திட்டத்தைத் தடுக்க பேருதவியாக இருந்தது. இங்கிலாந்துக்கு ராஜீவ் காந்தி வந்தபோது அவரைக் கொல்ல பெரும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அதை நாங்கள் முறியடித்து விட்டோம்.

1984ம் ஆண்டு அமிர்தசரஸில் நடந்த பொற்கோவில் தாக்குதலுக்குப் பின்னர் சீக்கிய தீவிரவாதம் இங்கிலாந்தில் அதிகரித்திருந்தது.

இதனால் பெரும் அபாயங்களை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது. எனவே அப்போதைய தீவிரவாதிகள் பட்டியலில் காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளை நாங்கள் முதலில் வைத்திருந்தோம்.

தீவிரக் கண்காணிப்பு மற்றும் உளவுக் கட்டமைப்பை முடுக்கி விட்டிருந்தோம். இதன் மூலம் ராஜீவ் காந்தியைக் காக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு அடுத்த 6 ஆண்டுகளில் 1991ல் நடந்த மனித குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி பலியானார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X