மருத்துவ கல்லூரி வளாகத்தில் சிக்கிய 100 பாம்புகள்

மருத்துவமனை வாளகத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதி வாளகத்தை சுற்றி முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால் அங்கு பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை மாணவிகள் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பாம்புகளை பிடிக்கும் நடவடிக்கையை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் மோகன் மேற்கொண்டார்.
இதையடுத்து நெல்லை, பேட்டை, மேலப்பாளையம், மானாமதுரை, ஆறுமுநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாம்பு பிடிக்கும் தொழிலாளிகள் 8 பேர் வரவழைக்கப்பட்டனர்.
நேற்று காலை மருத்துவமனை வாளகத்திற்கு வந்து அவர்கள் மகுடிகளை எடுத்து ஊத ஆரம்பித்தனர். மகுடி ஓசையைக் கேட்டதும் ஆங்காங்கு பதுங்கிக் கிடந்த பாம்புகள் மெதுவாக வெளியே வர ஆரம்பித்தன.
முட்புதர்களில் இருந்து சரமாரியாக வெளியே வந்தன. கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சாரைபாம்பு என சரமாரியாக வந்தன. அவற்றை பாம்பாட்டிகள் மடக் மடக் என்று பிடித்தனர்.
மொத்தமாக, 25 பெரிய பாம்புகளும், 75 சிறிய பாம்புகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பாம்புகள் சிக்கின.
பாம்புகளைப் பிடித்த விஷயத்தை பின்னர் வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன் பின்னர் வனவர் மணிமாறன், வனக்காப்பாளர் அண்ணாமலை, வனக்காவலர்கள் துக்கமுத்து, வெள்ளைசாமி ஆகியோர் பிடிபட்ட பாம்புகளை இரும்பு கூண்டில் அடைத்து எடுத்து சென்று மேலப்பாட்டம் மலை பகுதியில் வி்ட்டனர்.
அரசு மருத்துவமனை வாளகத்தில் நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த பாம்புகள் தொல்லைக்கு தீர்வு ஏற்பட்டதால் நர்சிங் மாணவிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடந்த 2003ம் ஆண்டு இதே போன்று மெகா பாம்பு வேட்டை நடத்தி 100க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறுபடியும் இப்படி ஒரு வேட்டை நடத்தாத வகையில், பாம்புகள் ஊடுறுவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைளை மருத்துவனை நிர்வாகம் எடுப்பது நல்லது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications