ஜெய்ராம் என் கடிதத்திற்கு பதில் கூட அனுப்பவில்லை- கருணாநிதி

இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், முழுக்க முழுக்க தவறான தகவல்களின் அடிப்படையில் தவறான உண்மைகளின் அடிப்படையில் வழங்கியுள்ளார்.
எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என ஜெய்ராம் ரமேஷுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.
கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான பிரச்சினையாக இது இருப்பதாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், ஆய்வுக்கு அனுமதி வழங்குவதாக இருந்தால், அதுதொடர்பாக தமிழகத்துடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கோரி ஜெய்ராம் ரமேஷுக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால் எனது கடிதத்திற்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலே அனுப்பவில்லை. அத்தோடு நில்லாமல், கேரள அரசு ஆய்வு நடத்த அனுமதியும் வழங்கியுள்ளார். தமிழக அரசுடனும் அவர் கலந்தாலோசிக்கவில்லை.
மேலும், தேசிய வன விலங்குகள் வாரிய நிலைக்குழுக் கூட்ட விவரங்கள் குறித்த அறிக்கை அதிர்ச்சி தருவதாக உள்ளது. அதில், 113 ஆண்டு கால முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. அணை உடைந்து எதிர்காலத்தில் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளிக்கும் முடிவுக்கு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இது மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் 2000மாவது ஆண்டு ஜூன் மாதம் நியமித்த நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையின் முடிவுக்கு முரணாக உள்ளது.
அணை மிகவும் பாதுகாப்பாகவும், ஆபத்தின்றியும் இருப்பதாக நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும், அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராயும் அதிகாரம், தேசிய வனவிலங்குள் வாரிய நிலைக்குழுவுக்கு இல்லை.
மேலும், இந்த விவகாரத்தை நிலைக் குழுவில் வைத்து விவாதிப்பது நீதிமன்ற விவகாரத்தில் தலையிடுவது ஆகாது என்று கூறியிருப்பது அப்பட்டமான தவறான தகவல் ஆகும் என்று கூறியிருந்தார் முதல்வர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications