தபால் நிலையத்தில் இனி எம்டிஎஸ் வவுச்சர்கள்
சென்னை: எம்டிஎஸ் மொபைல் சர்வீஸ் ரீசார்ஜ் வவுச்சர்கள் இனி சென்னை தபால் அலுவலகங்களில் தாராளமாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய தபால் துறையும் எம்டிஎஸ் சர்வீஸ் வழங்கும் சிஸ்டமா ஷ்யாம் டெலி சர்வீஸஸும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
முதல்கட்டமாக சென்னையில் உள்ள 50 தபால் அலுவலகங்களில் இந்த ரீசார்ஜ் வவுச்சர்கள் கிடைக்கும். பின்னர் அலுவலகங்களிலும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
இதுகுறித்து சிஸ்டெமா ஷ்யாமா டெலிசர்வீஸஸின் தமிழக, கேரள சிஓஓ ஸ்ரீனிராவ் சாரிபிள்ளை கூறுகையில், "இந்திய தபால் துறை மிகப் பெரியது. பரந்து விரிந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தத் திட்டம். இ ரீசார்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தபால் அலுவலகங்கலில் கிடைக்கும்" என்றார்.
சென்னை மாநகர போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராமானுஜம் கூறுகையில், "தேசிய தபால் வாரத்தையொட்டி இந்த புதிய வசதிகளை சென்னை மக்களுக்கு செய்து தருவதாக"த் தெரிவித்தார்.