பாக்: மீண்டும் தீவிரவாத தாக்குதல்-11 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் போலீஸ் நிலையத்துக்கு வெளியே இன்று காலை கார் குண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடத்தின் மீது இன்று கார் குண்டு மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் அருகிலிருந்த மசூதியும் சேதமடைந்தது.
நேற்று லாகூரில் தற்கொலைப் படையினர் உள்ளிட்டோருடன் புகுந்த தீவிரவாதிகள் 3 இடங்களில் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இன்று பெஷாவர் தாக்குதல் நடந்துள்ளது.
இத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என பாகி்ஸ்தான் கருதுகிறது.
அமெரிக்காவின் நெருக்குதலால் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில் இத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.