இந்திய-சீன பிரதமர்கள் இடையே 'ஹாட்லைன்'!

Subscribe to Oneindia Tamil

Hotline
டெல்லி: இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து இந்திய-சீன பிரதமர்கள் இடையே ஹாட்லைன் தொடர்பை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

எல்லையில் ஊடுருவல், பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தது ஆகிய செயல்களால் இந்தியாவை சீனா சீண்டி வருகிறது. இதையடுத்து பாகி்ஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மில் சீனாவின் செயல்களுக்க இந்தியா கண்டனம் தெரிவித்தது.

எல்லைக்கு அருகே சீனா புதிய ராணுவ, விமானப் படைத் தளங்களை அமைத்து வருவதையடுத்து இந்தியாவும் தனது பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந் நிலையில் இரு நாட்டு வெளியுறவத்துறைகளும் பதற்றத்தைத் தணிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. முதல் கட்டமாக இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையே நேரடி ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

இத் தகவலை இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்தார்.

அடுத்த வாரத்தில் தாய்லாந்தில் நடக்கும் ஆசியான் அமைப்பின் மாநாட்டில் மன்மோகனை சந்திக்க சீன அதிபர் வென் ஜியாபோ ஆர்வம் தெரிவித்ததும், அதை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியுடன் மன்மோகன் சிங் சந்திப்பு:

இந் நிலையில் நக்சலைட்டு தாக்குதல், சீன விவகாரம் ஆகியவை குறித்து ஜனாதிபதி பிரதீபா பட்டீலுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் ஆலோசனை நடத்தினார்.

விவசாய உற்பத்தி, உணவு இருப்பு நிலவரம் ஆகியவை குறித்தும் இருவரும் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+