சென்னையில் காவலர் நினைவுச் சின்னம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவலர் நினைவுச் சின்னத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
தமிழக காவல்துறையின் 150வது ஆண்டு விழா மற்றும் இந்திய காவலர் நினைவு தினம் ஆகியவை இன்று கொண்டாடப்பட்டன.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவி்ல் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி காவலர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார்.
ஏ.வி. இளங்கோ உருவாக்கியுள்ள இந்த நினைவுச் சின்னம், கடமையை நிறைவேற்றும்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் உள்ளது.
இந்த சின்னத்தை வடிவமைத்த சிற்பி இளங்கோவிற்கு முதல்வர் பரிசும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications