ஐஐடி நுழைவு தேர்வு-பிளஸ் டூவில் 80% மார்க் அவசியம்
டெல்லி: ஐஐடியில் சேர நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான தகுதி மதிப்பெண்ணை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சேர நுழைவுத் தேர்வில் பங்கேற்க 12ம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தற்போது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை 80 முதல் 85 சதவீதமாக உயர்த்த மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. 2011-வது கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று அத் துறையின் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
ஐஐடிகள் தொடர்பான ஆய்வுக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கபில்,
இந்திய ஐஐடிக்கள் சர்வதேச தரம் வாய்ந்தவை. இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
இதனால் ஐஐடியில் சேர நினைக்கும் மாணவர்கள் பிளஸ் டூ மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நுழைவுத் தேர்வுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இதனால் தான் நாடு முழுவதும் ஏராளமான நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன. ஐஐடியில் சேர்வதற்கு இதுபோன்ற பயிற்சி மையங்களை மாணவர்கள் சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும்.
இதற்காகத்தான் நுழைவுத் தேர்வைவிட மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து ஆய்வு செய்ய ஐஐடி இயக்குனர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆய்வு நடத்தி தனது பரிந்துரை அறிக்கையை 3 மாதங்களுக்குள் அளிக்கும்.
ஐஐடிக்களை சீரமைக்க அணுசக்திக் கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐஐடிகளில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது, தேசிய வளர்ச்சித் திட்டங்களில் ஐஐடியின் பங்கு ஆகியவை குறித்து ககோட்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து 6 மாதங்களில் அறிக்கை அளிக்கும்.
ஐஐடிகளில் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்றார் சிபல்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications