குற்றாலத்தில் குவியும் சபரிமலை பக்தர்கள்: போலீஸ் 'மிஸ்ஸிங்'-குடிமன்கள் கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் போலீஸார் போதிய அளவில் இல்லாததால் ஜட்டியுடன் ஆட்டம் போடும் குடிகாரர்கள் கொட்டம் குரங்குகளையே பீதிக்குள்ளாக்கி வருகிறது.

குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.

அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை அடுத்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்களும் குற்றாலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அருவிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பிற்கு பழைய குற்றாலம், மெயினருவி ஆகியவற்றில் குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் 'குடி'மகன்களை கட்டுபடுத்த முடியாத, சூழல் உள்ளது.

மெயினருவியில் நேற்று மாலை போலீசார் பற்றாக்குறை காரணமாக போதை தலைக்கேறிய சிலர் பாதுகாப்பு வளைவின் மீது ஏறி தடாகத்தில் தலைகுப்புற டைவ் அடித்த வண்ணம் இருந்தனர்.

போதிய அளவில் போலீஸாரைக் குவித்து இந்த போதை பார்ட்டிகளை கட்டுப்படுத்தினால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நிம்மதியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+