ஜார்க்கண்ட் சட்டசபை கலைப்பு-கேபினட் ஒப்புதல்
டெல்லி: குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபையைக் கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 9 மாதங்களாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் சட்டசபை கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன.
இந்த நிலையில் 3 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் ப.சிதம்பரம், அம்பிகா சோனி ஆகியோர் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையை கலைக்க மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன் அளித்த பரிந்துரையை அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் முறையான ஒப்புதலுடன் இது நடைமுறைக்கு வரும்.
இதனால், அங்கு விரைவில் தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுகொள்ளப்படும் என்றனர்.
கடந்த ஜனவரி 19ம் தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து அங்கு சட்டசபை முடக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications