மேலவளவு தலித் தலைவர் படுகொலை- 17 பேருக்கான ஆயுள் உறுதி
டெல்லி: மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் 17 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு மேலவளவு பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முருகேசன். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இதையடுத்து இன்னொரு ஜாதியைச் சேர்ந்த 17 பேர் முருகேசன் உள்ளிட்ட 6 தலித் வகுப்பினரை கொடூரமாகக் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் அழகர்சாமி உள்ளிட்ட 17 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது
நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில், அழகர்சாமி உள்ளிட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் போதிய ஆதாரங்களுடன் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே இவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications