68,000 தமிழர்களை மறு குடியேற்றம் செய்து விட்டது இலங்கை - பாலு

சமீபத்தில் தமிழகத்திலிருந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த பத்து எம்.பிக்கள் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்று இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டு, ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசி விட்டு தமிழகம் திரும்பினர்.
அவர்கள் பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை ஒன்றைக் கொடுத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்கள் மறு குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், 68 ஆயிரம் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் அகதிகள் முகாமில் இருந்து தமிழர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே 58 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
நேற்றும், இன்றும் மேலும் பலர் சொந்த ஊர்க ளுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார்கள். நேற்று யாழ்ப்பாணத்துக்கு 2 ஆயிரத்து 955 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். மன்னாருக்கு 764 பேரும், வவுனியாவுக்கு 890 பேரும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இன்று முல்லைத்தீவுக்கு 1,021 தமிழர்களும் யாழ்ப்பாணத்துக்கு 3,200 பேரும், வவுனியாவுக்கு 1000 பேரும், திரிகோணமலைக்கு 59 பேரும், மட்டக்களப்புக்கு 2 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதன்படி 2 நாட்களிலும் மொத்தம் 10 ஆயிரத்து 241 தமிழர்கள் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையும் சேர்த்தால் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சொந்த இடங்களுக்கு திரும்பி இருக்கிறார்கள்.
கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் ...
இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைவரும் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர் என்றார் டி.ஆர்.பாலு.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications