அதிகாலையில் உறவுக்கு அழைப்பு- வர மறுத்த கணவரைக் கொன்ற பேராசிரியை

Subscribe to Oneindia Tamil

ஜெயங்கொண்டம்: அதிகாலையில் உறவுக்கு அழைத்தார் பேராசிரியை மனைவி. கணவரோ, நீ கல்லூரியில் யாருடன் இருந்தாய் என்று கேட்டு சண்டை பிடிக்க ஆத்திரமடைந்த மனைவி, கணவரைக் கொலை செய்தார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம். தா.பழூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். இவருடைய மனைவி சுதாமதி. தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு செல்வம் அதிகாலை மர்மமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் மனைவி சுதாமதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

செல்வம் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். செல்வத்தின் மைத்துனர் வசந்தகுமாரை பிடித்து விசாரித்து வந்தனர். அவர் கொடுத்த சில தகவல்கள் போலீஸாரை திடுக்கிட வைத்தது.

இதையடுத்து சிகிச்சை முடிந்து திரும்பிய சுதாமதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுதாமதியே கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சுதாமதி கொடுத்த வாக்குமூலம்..

சம்பவத்தன்று எனது கணவர் செல்வத்தை விடியற்காலையில் உடலுறவுக்கு அழைத்தேன். அப்போது அவர் வர மறுத்தார். இதனால் கோபமடைந்த நான், நீ வேறு எந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்தேன்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், நீ கல்லூரிக்கு செல்கிறாயே, நீ வேறு யாருடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கூறி கன்னத்தில் அறைந்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதையடுத்து எனது கணவர் செல்வம் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் நான் சுதாரித்து கொண்டு எனது கணவரின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினேன். இதில் பலத்த வெட்டுப்பட்டு எனது கணவர் சம்பவ இடத்திலேயே செத்தார்.

இந்த தகராறில் எனது குழந்தைக்கு அருகில் இருந்த கட்டிலில் மோதி காயம் ஏற்பட்டது. உடனே அரிவாளால் என்னையே நான் வெட்டிக்கொண்டு காயம் ஏற்படுத்திக் கொண்டேன். பின்னர் எனது சகோதரன் வசந்தகுமாரிடம் கூறி, இதை வெளியில் சொன்னால் குழந்தைகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினேன். இதனால் அவனும் என்னை அப்போது காட்டிக் கொடுக்கவில்லை என்றார்.

இதையடுத்து சுதாமதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+