கடலோர தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும்- வானிலை மையம்
சென்னை: கடலோர தமிழகத்திலும், புதுவையிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை, தமிழகம், ஆந்திரா அருகே வங்கக் கடலில், நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தமிழகம் அருகே தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுவாக வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக சீர்காழி, மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பெய்தது.
புதுச்சேரி, ராமேஸ்வரம், கோவை, திருப்பூர், ஈரோடு, பெருந்துறை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, கடலூர், பரங்கிப்பேட்டை, கொள்ளிடம், மயிலாடுதுறை, பாம்பன், நன்னிலம், வலங்கைமான் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழையும் பெய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில்...
சென்னையில் இன்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. சில இடங்களில் லேசான தூறல் மழை காணப்பட்டது.












Click it and Unblock the Notifications