ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல்- விமான நிலையங்கள் உஷார்

மும்பையில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகத்திற்கு நேற்று ஒரு இ-மெயில் வந்தது. அதில், ஏர்-இந்தியா விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை வெடித்துச் சிதறும் என்று மிரட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு வெடிகுண்டு சோதனை, கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமான நிலைய அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்தினர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் இருந்து புறப்பட்டு செல்லும் ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்களில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து ஏர்-இந்தியா நிறுவனங்களில் இருந்து கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்ல கூடிய 37 விமானங்களிலும் அதிகாரிகள் பலகட்ட சோதனை செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர்.
விமான பயணிகள் அனைத்து விதமான திரவ பொருட்களையும் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. விமானங்களில் திரவ பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏற்கனவே தடை உள்ளது. திரவ வடிவில் குண்டுகளை எடுத்துச்சென்று வெடிக்கச் செய்ய முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனஆல் இது சரியான முறையில் நடைமுறையில் இல்லை.
ஆனால் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்தினர்.
நேற்று நாடு முழுவதும் நடந்த சோதனையில் எங்கும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications