வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு தேச விரோதம்-பாஜக

அக் கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்,
ஜமாயத் உலாமா இ ஹிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்ற தனது மாநாட்டில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
ஆனால், அதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அந்தத் தீர்மானத்தை கண்டிக்கவில்லை. இதன்மூலம் அந்தத் தீர்மானத்துக்கு மத்திய அரசின் ஆதரவு உள்ளது தெளிவாகிறது.
முதலில் அவர் எதற்காக அந்த மாநாட்டுக்குப் போனார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். போனவர் அந்தத் தீர்மானத்தையாவது எதிர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் போனதால் நாட்டில் பிரிவினையைத் தூண்டிவிடும் தீர்மானத்துக்கு ஆதரவு தருவது போல நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
தலிபான் மன நிலையை வைத்துக் கொண்டு தீவிரவாதத்துக்கு எதிராக போர் தொடுத்துவட முடியாது. வந்தே மாதரம பாடுவது என்பது கட்டாயமில்லை. அவரவர் சொந்த விருப்பததைப் பொறுத்ததே. இந் நிலையில் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எனன?.
பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை சிதம்பரம் இப்போது மீண்டும் கிளப்ப வேண்டிய அவசியம் என்ன?.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
முரளி மனோகர் ஜோஷி:
மூத்த பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், வந்தே மாதரத்துக்கு எதிரான இந்தத் தீர்மானம் ஏற்புடையதல்ல. இது அரசியல் சட்டத்துக்கும் விரோதமான தீர்மானம். சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடையே உணர்ச்சியைப் பரப்ப உதவிய பாடல் இது என்றார்.
கல்ராஜ் மிஸ்ரா:
பாஜக தேசியச் செயலாளர் கல்ராஜ் மி்ஸ்ரா கூறுகையில், வந்தே மாதரத்துக்கு எதிரான இந்த பத்வாவை எல்லா வகையிலும் எதி்ர்போம். இது நாட்டுக்கு எதிரானது, நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது என்றார்.
ப.சிதம்பரம் விளக்கம்:
இந் நிலையில் அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியோபந்த் மாநாட்டில் நான் 3ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை கலந்து கொண்டேன். அந்த நேரத்தில், வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, நான் மேடையில் இல்லை. வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதை மாநாட்டில் நான் பேசியபோது எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications