ஆக்கிரமிப்பு-'டிராபிக்' ராமசாமிக்கு கொலை மிரட்டல்
சென்னை: சென்னை தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவிலை போலீஸார் அகற்றினர். இதையடுத்து இதற்குக் காரணமாக இருந்ததற்காக சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாண்டிபஜார் தென் மேற்கு போக்ரோட்டில் புதிதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டது. 8-க்கு 8 அகலத்தில் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு அதன் மீது சுமார் 12 அடி உயர கோபுரமும் கட்டப்பட்டது. கோவில் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிசேகமும் செய்ய வேலைகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் அந்த கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து அந்தக் கோவிலை இடித்துத் தள்ள மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கூடி விட்டனர். இருப்பினும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் இடித்துத் தள்ளப்பட்டது.
கோவில் இடிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த சிலர் டிராபிக் ராமசாமி வீட்டை முற்றுகையிட்டனர். சிலர் அவரை அடிக்கவும் முற்பட்டனர். அவரைக் கொன்று விடுவதாகவும் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தற்போது மாம்பலம் போலீஸில் டிராபிக் ராமசாமி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications