3 தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை!
சென்னை: பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின்பேரில், சென்னையில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கில் ரொக்கம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினார்கள்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மச்சந்திர சிங், நாராயண சிங் மற்றும் பிரமோத் சிங். இவர்கள் நடத்தும் இரும்பு தொழிற்சாலைகளில் பல கோடி அளவுக்கு ஆயத்தீர்வை வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சி.பி.ஐ. போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் பேரில் நேற்று காலையில் இருந்து இரவு வரை சி.பி.ஐ. போலீசாரின் விசேஷ குற்றப்புலனாய்வு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திருவொற்றிiரில் உள்ள ராமச்சந்திர சிங், நாராயண சிங், பிரமோத் சிங் ஆகியோர் வசிக்கும் வீடுகள், அவர்களுடைய தொழிற்சாலைகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.
இதில் ரூ.17 லட்சம் ரொக்கப்பணமும், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து சோதனை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் மீதான நடவடிக்கை இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.