தென் மாவட்டங்களில் 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும்

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை...
தென் தமிழகத்தில் பல இடங்களில் இன்று மழை பெய்தது. தமிழகத்தின் வட பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
அதிக அளவாக குன்னூரில் 6 செமீ மழை பெய்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம், கன்னியாகுமரி, நாகர்கோவில் தலா 5, ராமநாதபுரம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், பூதப்பாண்டி, போடிநாயக்கனூர், கோவிலாங்குளம் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.
அறந்தாங்கி, பாளையங்கோட்டை, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, பவானிசாகர், குண்டா பாலம் தலா 3 செமீ, அதிராம்பட்டினம், திருவாடானை, தொண்டி, ராதாபுரம், மணியாச்சி, மயிலாடி, தக்கலை, திருச்செங்கோடு, சங்கரிதுர்க்கம் தலா 2 செமீ, பண்ருட்டி, உளுந்தூர்ப்பேட்டை, வல்லம், மணல்மேல்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி, பாம்பன், ஆயக்குடி, நாங்குநேரி, தென்காசி, சூரங்குடி, பேச்சி்ப்பாறை, மேட்டூர் அணை, ஓமலூர், சேலம், கேத்தி, கோத்தகிரி, அரவக்குறிச்சி, மாயனூர், முசிறி, திருப்பத்தூர் தலா ஒரு செமீ மழை பெய்துள்ளது.
23ம் தேதி காலை வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு..
தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும்.
தமிழகத்தின் தென் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நெல்லையில் நேற்று மாலை முதல் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. இன்று காலையிலும் மழை நீடித்ததால் நகரம் வெள்ளக்காடாகியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
நெல்லை மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் இன்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னல்-300 டிவிக்கள் சேதம்:
இதற்கிடையே, கடையநல்லூரில் ஏற்பட்ட இடி, மின்னலுக்கு திரிகூடபுரம், சொக்கப்பட்டி பகுதிகளில் 300 டிவிக்கள் சேதமடைந்தன.
கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் பலத்த இடி மின்னல் காணப்பட்டது. சுமார் 2 மணி நேரம் இடி, மின்னலுக்கு பிறகு கனமழை கொட்டியது.
தொடர்ந்து ஏற்பட்ட இடி, மின்னல் காரணமாக கடையநல்லூர், சொக்கப்பட்டி, திரிகூடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 300 வீடுகளில் வைக்கப்பட்டிருந்த டிவிக்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் பலத்த மழையின் காரணமாக கருப்பாநதி அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் வரத்தும் காலை அதிகமாக காணப்பட்டது. 1 அடி நீர்மட்டம் குறைந்திருந்த நீர்மட்டம் நேற்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக மீண்டும் 70 அடியை எட்டியது.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications