வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க நிரந்தர தேசிய ஆணையம் - லிபரான்
டெல்லி: பாபர் மசூதி போன்ற வரலாற்றுச் சின்னங்கள், கலைப் பொக்கிஷங்கள் தொடர்பான சர்ச்சைகள், வழக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால், தேசிய அளவில் நிரந்தரமான ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று லிபரான் கமிஷன் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் வழங்கும் தீர்ப்பே உறுதியானதாக, இறுதியானதாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இந்த ஆணையத்திற்கு அதிகாரங்கள், சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் லிபரான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கையில் லிபரான் கூறியிருப்பதாவது...
வரலாற்றியலாளர்கள், தொல்பொருள் துறையினர் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு இந்த ஆணையம் அமைய வேண்டும். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இவர்கள் செயல்பட வேண்டும். அதேசமயம், நாட்டின் ஒற்றுமை, சமூகங்களுக்கிடையிலான அமைதி, பிராந்தியங்களுக்கிடையிலான அமைதி, இணக்கம் ஆகியவை குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண நவீன வசதிகளுடன் கூடிய விசாரணை வாய்ப்பு அவரக்ளுக்கு அளிக்கப்பட வேண்டும். யாருக்கு இது சொந்தம் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் ஆராய்ந்து இந்த ஆணையம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் லிபரான்.
ஆனால் மத்திய அரசு இந்த பரிந்துரையை தேவையில்லை என்று கூறி நிராகரித்துள்ளது. இதற்குப் பதிலாக, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கினால் போதுமானது என்று அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து லிபரான் கூறுகையில், சர்ச்சைக்குரிய கட்டடம் கோவிலா, மசூதியா என்பதை, தொல்பொருள் துறையினர், வரலாற்றியலாளர்கள் உள்ளிட்டோர் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதியோ, நீதிபதியோ, பத்திரிக்கையாளரோ இதைக் கண்டுபிடிக்க முயலக் கூடாது.
இது இப்படி இருக்கலாம் என்று ஊகம் செய்யப் போவோமானால் அது 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடந்த சம்பவம் போன்ற பெரும் குழப்பத்திற்குத்தான் வித்திடும் என்று கூறியுள்ளார் லிபரான்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications