லிபரான் அறிக்கை முழுக்க முழுக்க அரசியல்மயமானது- கத்தியார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மீது எந்தத் தவறும் இல்லை என்று லிபரான் கமிஷன் கூறியிருப்பது முழுக்க முழுக்க அரசியலாகும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் கத்தியார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வாஜ்பாயை குற்றம் சாட்டுகிறார் லிபரான். ஆனால் நரசிம்மராவ் நல்லவராம். இதுவே இந்த அறிக்கை எந்த அளவுக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
வெறியைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறுகிறாரே லிபரான், அப்படியானால் அதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும்.
அமைக்கப்படும் அனைத்து விசாரணைக் கமிஷன்களுமே அரசியல் சார்பானவைதான். இதை வைத்து அரசியல் செய்யப் பார்க்கும் அரசுகள் இதை வெளியிடுகின்றன. நினைக்காத அரசுகள் அதை வெளியிடுவதில்லை என்றார் கத்தியார்.












Click it and Unblock the Notifications