'தலிபான் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள எல்லைப் பகுதியில் பங்கர் அமைக்கும் பாக்.'
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ரமன் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லை தாண்டி சில முக்கிய கட்டுமானங்கள் நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சில இடங்களில் பங்கர்கள் மிக மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
அவர்களது பகுதிக்குள் தாக்குதல் நடந்தால் கூட அதிலிருந்து தப்பும் வகையில் அமைத்து வருவதாகவும் தெரிகிறது.
ஒரு வேளை தலிபான் அல்லது பிற தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் படையினர் இவ்வாறு அமைக்கலாம் என கருதுகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications