லிபரான் அறிக்கை-9ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம்
டெல்லி: வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில், லிபரான் கமிஷன் அறிக்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு குறித்து லிபரான் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முறைப்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே வெளியானதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் விவாதிக்க்படவுள்ளது.
ஈழத் தமிழர்கள் குறித்தும் விவாதம்...
அதேபோல, இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலைமை குறித்த விவாதம் நாளை நடைபெற உள்ளது. பூமி வெப்பமாதல் மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த விவாதம் இன்றும், மாவோயிஸ்டுகள் வன்முறை குறித்து 7ம் தேதியும் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற இருக்கிறது.
கைத்தடியுடன் லாலு...
இதற்கிடையே, நேற்று லோக்சபா கூட்டத்திற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கைத்தடியுடன் வந்தார்.
சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்ததால் லாலுவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கைத்தடி உதவியுடன் நடமாடுகிறார்.
அவர் சபைக்கு வந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications