துபாய் நெருக்கடி சாதாரணமானதுதான் - இந்தியாவுக்கு பாதிப்பில்லை: உலக வங்கி தலைவர்
டெல்லி: துபாய் நெருக்கடி சமாளிக்கக் கூடிய அளவு சாதாரணமானதுதான். இதனால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார் உலக வங்கி குழும தலைவர் ராபர்ட் சோயல்லிக்.
டெல்லியில் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவை சந்தித்த பிறகு அவர் கூறுகையில், "நிதி நெருக்கடி காரணமாக துபாயில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சமாளிக்கக் கூடிய அளவுக்கு சாதாரண பிரச்சினைதான். இதில் இந்தியாவுக்கோ, அதன் தொழிலாளர்களுக்கோ பெரும் பாதிப்பு என்று சொல்ல முடியாது..." என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாய் இருக்கும். சீனாவும் இந்தியாவும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, உலகின் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தவை.
இப்போது மீண்டும் அவை தங்கள் பழைய ஆதிக்கத் தன்மையைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. இந்தியா தனது நிதியியல் கொள்கையை நிலைப்படுத்தினால் மேலும் பல பிரமிக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications