தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள் மீது ராணுவம் சுட்டதில் ஒருவர் பலி
வாழைச்சேனை (மட்டக்களப்பு): மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை கரடித் தோட்டம் கடற் பகுதி வழியாக தப்பிச் செல்ல முயன்ற தமிழர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
கரடித் தோட்டம் கடற்பகுதி வழியாக படகுகள் மூலம் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல தமிழர்கள் முயன்றனர். இதற்காக அங்கு படகுகளுக்கா காத்திருந்தனர்.
இந்த நிலையி்ல் அங்கு திடீரென ராணுவத்தினர் விரைந்து வந்தனர். இதைப் பார்த்த பலர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிலர் ராணுவத்தினரைப் பொருட்படுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது ஒருவர் ராணுவ வீரரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். இதையடுத்து அவரை ராணுவத்தினர் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றன். துப்பாக்கிச் சூட்டில் இன்னொருவர் காயமடைந்தார்.
அந்த இடத்திலிருந்து அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், கேஸ் சிலிண்டர்கள், 65 பாட்டில் தண்ணீர், 29 உயிர் காக்கும் உடைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications