ஸ்ரீநகரில் மிதமான நிலநடுக்கம்-சேதாரம் இல்லை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிர்சேதாரமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இன்று காலை 10.03 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவாகியிருந்தது. பூகம்ப அதிர்வை உணர்ந்தவுடன் மக்கள் பதட்டமடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒடினர். இதனால் சில மணி நேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.
எனினும், பயப்படும் அளவுக்கு நிலவரம் இல்லை என பூகம்ப ஆய்வு மைய தகவல் வெளியான பிறகு மக்கள் நிம்மதியுடன் வீடுகளுக்கு திரும்பினர்.
இந்திய சீன எல்லைப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்க ஏற்பட்டதாக புவியியல் மற்றும் பூகம்பவியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications