For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை கடைகளி்ல் ஏப். முதல் 'பிளாஸ்டிக் பை'க்கு தடை

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் உள்ள ஐவுளிக் கடைகள், வர்த்தக நிறுவனங்களி்ல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில், மறு சுழற்சிக்கு உட்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் ஜெயராமன் பேசுகையில்,

பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோர் அனைவரும் பொது நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் சேருவதால், நிலத்தடி நீர் கசப்பு தன்மை அடைவதோடு விஷத் தன்மையாக மாறுகிறது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராம அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கிராம அளவிலும், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் வழங்கப்படும்.

வரும் ஜனவரி 1ம் தேதி முதல் திருமண மண்டபங்கள், டீக்கடைகளில் 'யூஸ் அண்ட் த்ரோ' எனப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை பயன்படுத்த கூடாது. வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், ஐவுளி கடைகள் ஆகியவை இவற்றை உபயோகிக்க கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X