For Daily Alerts
Just In
ஆந்திரா: 34 இலங்கை தமிழர்கள் கைது
ஹைதராபாத்: 6 படகுகளில் வந்த 34 இலங்கைத் தமிழர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் பிடித்துள்ளனர்.
இவை இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து கொண்டிருந்ததைக் கண்ட கடலோரக் காவல் படையினர் அவற்றை தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில் அங்கு வந்த 6 படகுகளில் 34 தமிழர்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை படகுகளுடன் காக்கிநாடா துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு படகுகளை பறிமுதல் செய்த கடலோர காவற்படையினர், இலங்கைத் தமிழர்களை கடலோர காவல் படை கப்பலிலேயே சிறை வைத்து விசாரணை நடத்தி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.
இவர்கள் அகதிகளாக வந்தவர்களா அல்லது மீனவர்களா என்று தெரியவில்லை.
Comments
Story first published: Monday, December 14, 2009, 17:45 [IST]