கலக்கத்தில் ஆந்திர சாப்ட்வேர் நிறுவனங்கள்
ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னையால் தினசரி ரூ.150 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விற்பனை, சரக்கு போக்குவரத்து, வங்கிகள் மூடப்பட்டதால் பணப் பரிமாற்றங்களில் இடைஞல்கள், ஏடிஎம் சேவைகள் முடக்கம், அலுவலக பணிகள் பாதிப்பு என பல்வேறு அம்சங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஆந்திராவில் தொழில் துறையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
கலக்கத்தில் சாப்ட்வேர் நிறுவனங்கள்:
ஹைதராபாத் சாப்ட்வேர் நிறுவனங்கள் சங்கமும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஐடி நிறுவனங்கள் மீது குறி வைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படாவிட்டால் பணியாளர்கள், முதலீட்டாளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்.
மிகவும் சிரமப்பட்டு ஐடி துறையில் ஒரு தனி முத்திரையை பதித்துள்ள ஆந்திரா இதுபோன்ற சம்பவங்களின் காரணமாக அதை இழக்க நேரிடும். ஆந்திர வளர்ச்சி அது மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும்' என்று அந்த சங்கம் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications