பிரி​யாணியும் திரு​மங்​க​லம் பார்​முலாவும்!-விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

Vijaykanth
சென்னை: இடைத் தேர்தலில் மக்கள் நீதியின் திரண்டு நிற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தேமுதிக​ தலை​வர் விஜ​ய​காந்த் கூறி​யுள்​ளார்.​

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜன​நா​ய​கத்​தில் வேண்​டா​த​வர்​களை நீக்​க​வும்,​​ வேண்​டி​ய​வர்​களை ஆட்​சிக்​குக் கொண்டு வர​வும் வகை​செய்​வதே தேர்​தல்.

ஆனால் தேர்​தல்​கள் நியா​ய​மா​க​வும்,​​ சுதந்​தி​ர​மா​க​வும் நடை​பெற வேண்​டும்.​ இதற்​குத் தேர்​தல் ஆணை​யம்​தான் நேரடி பொறுப்பு என்​றா​லும்,​​ நிர்​வாக ரீதி​யில் மாநில அர​சு​தான் இதற்கு உத்​த​ர​வா​தம் அளிக்க வேண்​டும்.​

ஆனால் தமிழ்​நாட்​டில் நடை​பெற உள்ள திருச்​செந்​தூர்,​​ வந்​த​வாசி இடைத் தேர்​தல்​க​ளில் இவை நிறை​வே​றுமா?​

மேலை நாடு​க​ளில் இடைத் தேர்​தல்​க​ளின்​போது அமைச்​சர்​கள் பிர​சா​ரத்​தில் ஈடு​ப​டு​வ​தில்லை.​ ஆனால் இங்கு ஆட்சி செய்​யும் கோட்​டையே காலி​யா​கி​வி​டு​கி​றது.

அமைச்​சர்​கள் தொகு​தி​க​ளில் முகா​மி​டு​கின்​ற​பொ​ழுது அதி​கா​ரி​கள் புடை​சூழ வரு​வ​தும்,​​ ஆணை​கள் பிறப்​பிப்​ப​தும்,​​ அப்​பட்​ட​மான அதி​கார துஷ்​பி​ர​யோ​கம் ஆகும்.​

காவல்​துறை உத​வி​யோடு எதிர்க்​கட்​சி​க​ளின் மீது வன்​முறை கட்​ட​விழ்த்​து ​வி​டப்​ப​டு​கி​றது.​ ஒரு ஓட்​டப்​பந்​த​யம் போல பல அர​சி​யல் கட்​சி​க​ளுக்​கி​டையே ஆரோக்​கி​ய​மாக நடை​பெ​ற​வேண்​டிய அர​சி​யல் போட்டி,​​ சமூக விரோ​தி​க​ளைக் கொண்ட போர்க்​க​ள​மா​கவே ஆக்​கப்​பட்​டு​விட்​டது.​

வாக்​கா​ளர்​களை ஒரு புறத்​தில் பய​மு​றுத்​து​வ​தும்,​​ மறு​பு​றத்​தில் பணம்,​​ பிரி​யாணி என்று ஆசை காட்​டு​வ​தும் வாடிக்​கை​யா​கி​விட்​டது.​ இதையே திரு​மங்​க​லம் பார்​முலா என்று கொண்​டா​டு​கின்​ற​னர்.​

அது ஜன​நா​ய​கத்​துக்கு வெட்​டப்​பட்​டுள்ள மர​ணப் படு​குழி என்று நல்​ல​வர்​கள் வேத​னைப்​ப​டு​கின்​ற​னர்.​

மீனவ வாக்​கா​ளர்​க​ளைக் கவ​ர​வேண்​டும் என்​ப​தற்​காக தமி​ழக முதல்​வர் கரு​ணா​நிதி கேட்​டுக் கொண்​ட​தின் பேரில் மத்​திய அரசு மீன்​பி​டித் தொழில் ஒழுங்​கு​முறை சட்ட மசோ​தவை தாற்​கா​லி​க​மாக நிறுத்தி வைத்​துள்​ளது.​

அது மீண்​டும் கொண்​டு​வ​ரப்​ப​ட​மாட்​டாது என்ற உறுதி எது​வு​மில்லை.​ ஆகவே மீன​வர்​கள் இதை நம்ப வேண்​டாம் என்று கேட்​டுக்​கொள்​கி​றேன்.​

வாக்​களர்​க​ளுக்​குச் சிறி​த​ளவு பணம் கொடுத்து வெற்​றி​பெற்று பத​விக்கு வந்​த​பின் பெரு​ம​ள​வுக்கு ஊழல்
செய்​கின்​ற​னர்.​ மக்​க​ளின் வரிப்​ப​ணம் இத​னால் முக்​கால் பங்கு கொள்ளை போகி​றது.​

தமிழ் ​நாட்​டில் கடந்த 20 ஆண்​டு​க​ளில் ஆட்​சி​களை மாற்றி,​​ மாற்றி பார்த்​தும் கூட ஏழ்​மையை ஒழிக்க முடி​ய​வில்லை.​ மக்​க​ளுக்​காக பாடு​ப​டக்​கூ​டிய நல்​ல​வர்​கள் என்​றைய தினம் தேர்​தல்​க​ளில் ஈடு​பட்டு வெற்​றி​பெ​று​கி​றார்​களோ அன்​றைய தினம்​தான் மக்​க​ளுக்கு விடி​வு​கா​லம் ஏற்​ப​டும்.​

தேர்த​லில் செல​வ​ழிக்​கப்​ப​டும் பணம் அவர்​க​ளது உழைப்​பில் வந்​த​தல்ல.​ மக்​கள் வரிப்​ப​ணத்​தில் பத​விக்கு வந்​த​வர்​கள் மன​சாட்​சியை விற்று கொள்​ளை​ய​டித்​த​து​தான்.​ ஆகவே கடந்த ஆட்​சிக் காலங்​க​ளில் போட்டி போட்​டுக் கொண்டு ஊழ​லில் திளைத்​த​வர்​கள்,​​ இப்​போது போட்டி போட்​டுக் கொண்டு மக்​க​ளுக்​குப் பணம் கொடுக்​கி​றார்​கள்.​

எனவே பணம் வாங்​கிய மக்​கள் மன​சாட்​சிப்​படி அவர்​க​ளுக்​குத்​தான் ஓட்​டுப் போட​வேண்​டு​மென்ற
அவ​சி​ய​மில்லை.​​

பணத்தைக்கொண்டு தேர்தலில் ஜெயிப்பதும், பிறகு பணம் சம்பாதிப்பதும், பிறகு அதே பணத்தைக் கொண்டு மறுபடியும் தேர்தலில் ஜெயிப்பது என்ற விஷச் சக்கரத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு இந்த இடைத் தேர்தல்களை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

தேமுதிக தொடங்கியதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய பண மழையிலும் தமிழ்நாட்டு மக்கள் கணிசமான ஆதரவு அளித்து வருகிறார்கள்.

மக்கள் நீதியின் திரண்டு நிற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறி​யுள்​ளார் விஜ​ய​காந்​த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+