உட்கட்சித் தேர்தல் - அதிமுக கொடியுடன் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான பூசலால், அதிருப்தி அடைந்த தொண்டர்கள், அதிமுக கொடியுடன் கருப்புக் கொடியை ஏற்றி போராட்டம் நடத்தினர்.
அதிமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடக்கிறது. இதனால் ஆங்காங்கே மோதலும், பூசலும் வெடித்து வருகிறது. அதிருப்தி அடைபவர்கள் இப்போதெல்லாம் நேராக போயஸ்கார்டனுக்கு வந்து கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீடு முன்பு முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் தேர்தல் தொடர்பாக அதிருப்தி அடைந்த ஒரு பிரிவினர் அதிமுக கொடியுடன் கருப்புக் கொடியை ஏற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த தர்மலிங்கம், அப்பன் ஆகியோர் கூறுகையில், கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அ.தி.மு.க. வில் பதவி கிடைக்கிறது. இதனால் மனம் வெறுத்து கறுப்புக்கொடி ஏற்றினோம் என்றனர்.












Click it and Unblock the Notifications