தமிழகம்: 887 பேருக்கு சிக்குன் குனியா- சுகாதாரத்துறை

தமிழக சுகாதார துறை இயக்குனர் இளங்கோ நெல்லை மாவட்டத்தில் வைரஸ் நோய் பாதிப்பு குறித்து நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்.
மேலப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் கடையநல்லூரி்ல் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நோயின் தன்மை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
'தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் சந்தேகத்தின் பேரில் 3221 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 887 பேருக்கு சிக்குன் குனியா இருப்பது தெரிய வந்துள்ளது.
11 மாவட்டங்களில் வைரஸ் நோய் தாக்குதல் இருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை, தேனி, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் இல்லை.
2006ம் ஆண்டு பரவிய சிக்குன் குனியாவுடன் ஓப்பிடுகையில் இந்நோய் வித்தியாசமாக உள்ளது. அந்நோய் அப்படியே நோயாளிகளை முடக்கி விடும்.
வைரஸ் நோயை கட்டுபடுத்த அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications